பதிவு செய்த நாள்
29
ஆக
2016
11:08
திருப்பூர்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார் சிற்பம், திருப்பூர் அருகே கண்டறியப்பட்டது. திருப்பூர், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மை யத்தை சேர்ந்த ரமேஷ்குமார், திருநாவுக்கரசு, பொன்னுச்சாமி, ரஞ்சித் மற்றும் ரவிகுமார் ஆகியோர், திருப்பூர் மாவட்டம், பொங்லுார் ஒன்றியம், சின்னாரிபட்டி கிராமத்தில், தமிழ் எழுத்துக்களுடன் கூடிய, ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பத்தை கண்டறிந்துள்ளனர். ரவிகுமார் கூறுகையில், ‘‘திருப்பூர் அருகே சின்னாரிப்பட்டியில் கிடைத்த, அய்யனார் சிற்பம், 3.15 அடி அகலமும், 2.5 அடி உயரமும் உடையது. சிற்பத்தின் பின்பகுதியில் மூன்று வரி எழுத்துக்கள் உள்ளன. எழுத்துக்களின் அமைப்பை பார்க்கும் போது, கி.பி.10ம் நுாற்றாண்டை சேர்ந்ததாகும்,’’ என்றார்.