Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி பகுதி கோவில்களில் பிரதோஷ ... விக்கிரவாண்டியில் உறியடி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொழுகை நேரத்தில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை: கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
12:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இஸ்லாமியர் தொழுகை நேரத்தில், விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது என, கலெக்டர் கதிரவன் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் படி, களி மண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எந்த ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே, பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, மதம் தொடர்பான கோஷங்கள் எழுப்ப கூடாது. எந்த தனி நபரையும், மதத்தையும் புண்படுத்தும் வகையில் பதாகைகளை எடுத்த செல்ல கூடாது. மது அருந்தி விட்டு ஊர்வலத்தில் பங்கேற்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலங்கள், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் செல்ல அனுமதி இல்லை. மேலும் இஸ்லாமியர் தொழுகை நேரமான, மதியம், 12.30 மணி முதல், 2.30 மணி வரை, விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதியில்லை. பிற மத வழிபாட்டு தலங்கள் வழியாக செல்லும் போது, அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, எஸ்.பி., மகேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, ஏ.டி.எஸ்.பி., வீரராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 300 ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.கோவையின் ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar