Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை ... வேளாங்கண்ணி ஆலயத்தில் உழைப்பாளர்கள் விழா! வேளாங்கண்ணி ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

01 செப்
2016
12:09

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். அதற்காக, பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. திருக்கனுார் புதுகுப்பம் பகுதியில் விநாயகர் சிலை வடிவமைப்பு தொழில் இரவு பகலாக நடந்து வருகிறது. மண்பாண்ட தொழிலாளர் சங்கர் கூறும்போது, சுற்றுச்சூழலை பாதிக் கும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் சிலை, ரசாயன பெயின்ட்டினால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண் மற்றும் கிழங்கு மாவு, காகிதக் கூழ் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கும், விநாயகர் சிலைகளுக்கு மவுசு ஏற்பட்டது.

சுற்றுச்சூழலை பாதிக்காத இத்தகைய சிலைகளை வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்டர் கொடுத்து, வாங்கிச் செல்கின்றனர். ஒரு அடி முதல் 17 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள், தயாராகிறது. விலை அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

250 இடங்களில் சிலை பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியின், 250 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது என விநாயகர் சதுர்த்தி விழா பேரவை முடிவு செய்துள்ளது. பேரவை பொதுச் செயலாளர் சனில்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது என்றும், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 9ம் தேதி மாலை 4.00 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar