சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2016 04:09
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்தியபடி பூஜை நடந்தது. மூலவர் சரநாராயண பெருமாள் காலிங்க நர்த்தனராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து. திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.