வேலூர் மாவட்டம், காட்பாடியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கார்ணாம்பட்டு கிராமம். இங்குள்ள தர்மசம்வர்த்தினி சமேத கைலாசநாதர் கோயிலில் முகப்பு மண்டபத்தின் வெளியே தென்மேற்கு மூலையில் குபேர விநாயகர் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் சொந்தவீடு பாக்யம் கிட்டும்.