கோவையில் பதினாறு நாட்கள் விநாயகர் சதுர்த்தி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும் ஒரே கோயில் இது. வித்தக விநாயகருக்கு பதினாறு நாட்களும் பதினாறு வித அலங்காரங்கள், வேத பாராயணம், லட்சார்ச்சனை ஆகியவை நடக்கும். தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியம் கல்வி வளர்ச்சி மற்றும் சகல சவுபாக்கியங்கள் தர வல்லவர் இவர்.