பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் சடையாண்டி கோயில் திருவிழா நடந்தது.மருதாநதிக் கரை ஓரத்தில் தென்னை, மாந்தோப்புகள் சூழ சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் இக்கோயில் திருவிழா நடக்கிறது. நேற்று முன் தினம் இரவு நடந்த திருவிழாவில் 80 கிடாக்கள் வெட்டப்பட்டன. இரவு 1:00 மணிக்கு மேல் நடக்கும் விழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். விவசாய வளர்ச்சி, தோப்புகளில் காவல் காக்கும் தெய்வங்களுக்கு விழா எடுப்பதற்காக காலங்காலமாக இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.அக்கமார், வனதேவதை திருவிழாவினை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு சடையாண்டி திருவிழா நடந்தது. இரவு முழுவதும் கொண்டாடிய பின் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டுதல் நடந்தது. ஊர்பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.