பழநி: பராமரிப்பு பணிகளுக்காக, பழநி மலைக்கோயில் ரோப்கார் அக்.,5 முதல் ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது.பழநி மலைக் கோயில் ஞான தண்டாயுதபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய தினமும் ரோப்கார் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது. இது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒருநாளும், ஆண்டுபராமரிப்பு பணிகளுக்காக ஒருமாதம் வரை நிறுத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இவ்வாண்டிற்கான பராமரிப்பு பணிக்காக வரும் அக்.,5 முதல் ஒரு மாதம் வரை நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ஆண்டு பராமரிப்பு பணியில் ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் உள்ள உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கீரிஸ் ஈடுகின்றனர். தேய்மானம் அடைந்த பொருட்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன. அதன்பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும். இப்பராமரிப்பு பணிகள் முடிய குறைந்தபட்சம் ஒருமாதமாகும். என்றார்.