பதிவு செய்த நாள்
03
அக்
2016
03:10
திருப்பதி: திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு உற்சவம், இன்று (அக்.3ல்) துவங்கி அக்., 11ம் தேதி வரை, ஒன்பது நாட்களுக்கு விழா நடக்க உள்ளது.
பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று மாலை 6.15 மணி முதல் 6.30 மணிக்குள் மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியோற்றம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு திருமலை முழுவதும், வண்ண விளக்கு அலங்காரம், கடவுள் உருவங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, மலர் கண்காட்சி, அலங்கார வளைவு, தோரண வாயில், புகைப்பட கண்காட்சி போன்றவை அமைக்கப்படுகின்றன. அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் பல்வேறு புராணகாட்சிகள் இடம் பெற்றுள்ளன. மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் உண்டியல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.