Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால ... யாசகம் பெற்று நேர்த்திக்கடன் முத்தாரம்மன் பக்தர்கள் வலம்! யாசகம் பெற்று நேர்த்திக்கடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் கோவில்களில் நவராத்திரி கொலு வைத்து சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
குன்னுார் கோவில்களில் நவராத்திரி கொலு வைத்து சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

07 அக்
2016
11:10

குன்னுார் : குன்னுார் பகுதிகளில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி, கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழாவை ஒட்டி நடந்த துர்காயாக பூஜையில், காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, நடந்த லட்சுமி பூஜையில், தாய்மூகாம்பிகை, ஆதிபராசக்தி, காசி விசாலாட்சியம்மன், மதுரை மீனாட்சி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, அன்னலட்சுமி, திருப்பதி அலமேலு மங்கை அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில், சந்தான லட்சுமி அலங்காரத்தில் தாய், குழந்தையின் அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. மகாலட்சுமியாகம் நடந்தது. நேற்று திருச்சனுார் அலமேலு நாச்சியார் அலங்காரம், இன்று முதல், 9ம் தேதி வரை நாட்கள் சரஸ்வதி அலங்கார கொலு இடம் பெறுகிறது. இதில், வித்யா சரஸ்வதி, ராஜா மாதங்கி, மகா முப்பெரும் தேவியர், மகிஷா சுர மர்த்தினி அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்க உள்ளார். 11ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் குணா சாஸ்திரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதேபோல, குன்னுார் தந்திமாரியம்மன் கோவிலில் நாள்தோறும் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனை ஆராதனை பிரசாத வினியோகம் நடந்து வருகிறது. துருவம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

* அருவங்காடு சித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி அம்மன் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அர்ச்சனை, ஆராதனை, பஜனை, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar