Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னுார் கோவில்களில் நவராத்திரி ... கூடலூரில் மந்தையம்மன் கோயில் திருவிழா கூடலூரில் மந்தையம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யாசகம் பெற்று நேர்த்திக்கடன் முத்தாரம்மன் பக்தர்கள் வலம்!
எழுத்தின் அளவு:
யாசகம் பெற்று நேர்த்திக்கடன் முத்தாரம்மன் பக்தர்கள் வலம்!

பதிவு செய்த நாள்

07 அக்
2016
11:10

சாயல்குடி,:சாயல்குடி பகுதியில் யாசகம் பெற்று நேர்த்திக்கடன் செலுத்தும் முத்தாரம்மன் பக்தர்கள் வலம் வருகின்றனர். துாத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா பிரசித்தி பெற்றது. தசரா விழா கொடியேற்றம் அக்.,1ல் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக விரதம் இருந்து பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். சாயல்குடி, கடலாடி, கன்னிராஜபுரம், நரிப்பையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பத்திரகாளியம்மன், மாடன், கருப்பன், முருகன், விநாயகர், பிச்சைக்காரர், கருங்காலி, காளி, போலீசார், மோகினி, கிளி, ராஜா, யானை, கரடி, மயில், மன்மதன் உள்ளிட்ட விதவிதமான வேடங்களில் கடைகள், வீடுகள் தோறும் யாசகம் பெறும் நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். சாயல்குடி மாரியப்பன் கூறுகையில், இப்பகுதியில் முத்தாரம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். தசராவின் நிறைவு நாளன்று, ஒரு குழுவாக வேன்களில் பயணம், செய்து, யாசகம் பெற்ற தொகையை காணிக்கையாக செலுத்திவிடுவோம். தர்மம் எடுத்துதான் கோயிலுக்கு செல்ல வேண்டும், என்ற நடைமுறை பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar