Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கல்யாண உற்சவம்: திரளான ... தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயில் முடிகாணிக்கை கட்டணம் மூன்று மடங்கு உயர்வு; பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
12:10

பழநி:பழநி மலைக்கோயில் முடிக் காணிக்கை கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதிக்கு அடுத்து பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். இவர்களின் வசதிக்காக சரவணப்பொய்கை, சண்முகநதி, பாதவிநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன், தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.5 நாவிதர்களுக்கு பங்கு வழங்கப்படுகிறது. தங்களுக்கு சம்பளம் இல்லை எனக்கூறி பக்தர்களிடம் ரூ.50 முதல் ரூ.100 வரை நாவிதர்கள் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக புகார் வருவதால் முடிக்காணிக்கை கட்டணத்தை ரூ.10ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கோயில் பங்கு ரூ.4, பிளேடு ரூ.1, நாவிதர் பங்கு ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.

பக்தர்கள் அதிருப்தி: கேரள மாநிலம் கொல்லம் விக்கிரமன் கூறுகையில்,“நானும்,எனது மனைவியும் மொட்டை எடுத்தோம், ரூ.10டோக்கன் போக நாவிதருக்கு தலா ரூ.100 கொடுத்தோம். அறிவிப்பு பலகையில் இன்று முதல் முடிகாணிக்கை டோக்கன் ரூ.30ஆக உயர்த்தியுள்ளது, அதிர்ச்சிஅளிக்கிறது. ஆண்டிற்கு ரூ.பலகோடி வருமானம் உள்ள பழநி தேவஸ்தானம் நாவிதர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கி திருப்பதிபோல முடிகாணிக்கையை இலவசமாக்க வேண்டும்,” என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ முடிக் காணிக்கை நிலையங்களில் பக்தர்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதாக வரும் புகாரை தவிர்ப்பதற்காக ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூல் செய்தால் பக்தர்கள் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar