பதிவு செய்த நாள்
22
அக்
2016
12:10
கள்ளக்குறிச்சி: முதல்வர் ஜெ., பூரண நலம்பெற வேண்டி, கள்ளக்குறிச்சி நடுத்தக்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.
மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தொழுகையை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலுபாபு, கோமுகிமணியன், மாவட்ட அவைத் தலைவர் பச்சயைாப்பிள்ளை, நகர சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு, தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பா, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், மாணவரணி செயலாளர் சீனுவாசன், பள்ளி வாசல் தலைவர் ஷாஆலம், சிறுபான்மை பிரிவு அவைத் தலைவர் அப்துல்கரீம், நகர தலைவர் சர்புதீன், ஒன்றிய பாசறை தலைவர் பரியாஸ், பஷீர், ஜெயலாப்தீன், மாவட்ட பிரதிநிதிகள் இனாயத்துல்லா, அன்வர்பாஷா, பிர்தவுஷ், சர்தார், தொகுதி செயலாளர் பால்ராஜ், இளைஞரணி குபேந்திரன், கவுன்சிலர்கள் குட்டி, முருகன், குமரசேன், வேலுசாமி, பாலக்கண்ணன், சுகன்யாமோகன், ஜெயபிரகாஷ் மற்றும் கோபி, திருஞானபிரகாஷ் பங்கேற்றனர்.