பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. கோவிலில், 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நிரம்பியவுடன் திறந்து எண்ணப்படும். அந்த வகையில், உண்டியல்கள் நேற்று திறந்து காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தன. கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியல்களில், 38 லட்சத்து, 67 ஆயிரத்து, 905 ரூபாய், 189 கிராம் தங்கம், 464 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.