மயிலாடுதுறை:திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் தீபாவளி அருள் வாழ்த்துரை மக்களுக்கு மனமகிழ்ச்சியும், புத்துணர்வும் தரும் பண்டிகைகளுள் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் விழாக்கள் அனைத்தும் இறையுணர்வை வளர்க்கும் முறையிலேயே அமைந்துள்ளன. நம் வீட்டையும், உடலை யும் சுத்தமாக வைத்திருப்பது போல் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உள்ளத் தூய்மையை பேணுவதற்கு மிகவும் ஊக்கம் தருவன நம் பண்டிகைக் காலங்கள் ஆகும்.
நாவிற்குச் சுவையான இனிய உணவு வகைகளை உண்பது இன்பம் தருதல் போல, செவிக்குச் சுவையாக இனிய மொழிகளைப் பேசுதல்“ இன்பமான அனுபவமாகும். ”யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்று திருமந்திரம் கூறுகின்றது. திருக்குறளிலும் ” இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது. எல்லா உயிர்களும் இறை வனின் திருவருளுக்குரியவை. இந்த உண்மையை உணர்ந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய வேண்டும். உள்ளத்தில் விளங்கும் அன்பின் வடிவமாகவே வாக்கில் இனிய மொழி கள் வெளிப்பட வேண்டும்.
உடலின் செயல்களும் அமைய வேண்டும். ”” பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்று திருக்குறள் கூறுவதால் மக்கள் வாழும் பண்பு சார்ந்த வாழ்க்கைக்கு ஏற்பவே இயற்கை வளங்கள் கைகூடும். பருவகாலங்கள் சாதகமாக அமையும். நவீன விஞ்ஞான வளர்ச்சியை நம் பண்பாட்டுக்கு உகந்த முறையிலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை இறைவன் நமக்கு கருணையோடு வழங்கியருளிய பேறாகும். அதனால் இறைவழிபாட்டினை நாம் நியமமாகச் செய்து வரவேண்டும். அதனோடு மட்டுமின் றி நாம் செய்கின்ற புண்ணியங்களையும் இறைவன் திருவருளுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும். இந்த தீபாவளித் திருநாள் மக்கள் அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் தழைக் கச் செய்ய வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.