பதிவு செய்த நாள்
28
அக்
2016
12:10
அரியானூர்: அரியானூர், 1,008 சிவன் கோவில், கோபுரங்களில் இருந்த கலசங்கள் மாயமானது.
சேலம், அரியானூரில், 10 ஆண்டுகளுக்கு முன், 1,008 சிவலிங்கங்கள், நந்தி கற்சிலைகளை பிரதிஷ்டை செய்து, அதற்கென தனித்தனி சன்னதிகள் கட்டி, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அக்கோவிலை, தனியார் பல்கலை ஆக்கிரமித்து கட்டியதாக, வருவாய் துறை வழக்கு தொடுத்தது. பின், கோவில் நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானது என உத்தரவு வந்தது. அதையடுத்து, அந்த கோவில் நிர்வாகம், தமிழக அறநிலையத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தனியார் கட்டுப்பாட்டில் இருந்தபோது, 1,008 தனித்தனி சன்னதி கோபுரங்களில் இருந்த கலசங்கள், தற்போது அகற்றப்பட்டு, வெறும் கம்பிகள் மட்டும் கோபுரங்களில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோபுர கலசங்கள் மாயமானதால், அவைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்களா அல்லது தனியார் பல்கலை, தங்கள் செலவில் கட்டிய கோவில் கலசங்களை, திரும்ப எடுத்துக்கொண்டார்களா என தெரியாமல், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறநிலைத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்: ""1,008 சிவன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வரும்போதே, சிவலிங்க சன்னதிகளின் கோபுர கலசங்கள் இல்லாமல் தான் இருந்தது, என்றார்.