Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கசவனம்பட்டி குருபூஜையில் குவிந்த ... பழநி கோயிலில் நவ.,5ல் சூரசம்ஹாரம்: வின்ச் நிறுத்தம் பழநி கோயிலில் நவ.,5ல் சூரசம்ஹாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் நவ.,5 ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் நவ.,5 ல் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

05 நவ
2016
12:11

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று (நவ.,5) மாலை 4:30 மணிக்கு, பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

அக்.,31 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ.,4 இரவு 1மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நவ.,5 காலை 7:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், யாகசாலையில் மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு சண்முக விலாசமண்டபத்திலும், 2:30 மணிக்கு சஷ்டி விரத மண்டபத்திலும் ஜெயந்திநாதர் எழுந்தருளி தீபாரதனை நடக்கிறது.

சூரசம்ஹாரம்: மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கஜமுகம், சிங்கமுகம், சுய உருவத்துடன் கூடிய சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு சந்தோஷ மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். கோயில் வளாகத்தில் 108 மகாதேவர் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டனில் இருந்து பக்தர்கள் வருவர். சன்னிதி முன் எழுந்தருளும் குமரவிடங்க பெருமானுக்கு சாயா அபிஷேகம் நடக்கிறது. அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar