Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் நவ.,5ல் ... நெற்குணத்தில் கேட்பாரற்று கிடக்கும் தொன்மையான தீர்த்தங்கரர் சிலை நெற்குணத்தில் கேட்பாரற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி பெருவிழா:சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவத்துக்கு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி பெருவிழா:சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவத்துக்கு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

05 நவ
2016
12:11

கந்தசஷ்டி விழாவை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவம், விமரிசையாக நடைபெற இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், கந்த சஷ்டி பெரு விழா, 31ம் தேதி காலை, 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது.

இரண்டு நாள்: இதையடுத்து, ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. கந்தசஷ்டி விழாவை ஒட்டி, இரண்டு நாள் விழா இன்று துவங்குகிறது. நவ.,5 மாலை, 3:30 மணிக்கு, பஜாரில் உள்ள சர்ப விநாயகர் மற்றும் நாகவல்லி அம்மன் கோவிலில் உள்ள அம்மனிடம் சக்திவேல் பெறுதல், மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 6:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். இரண்டாம் நாளான நவ.,6, ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதே போல், திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கத்தில், வள்ளி, தேவசேனா சமேத குமார சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடந்து வருகிறது.

நாக சதுர்த்தி: விழாவின் நான்காம் நாளான நவ.,4 முன்தினம் இரவு, நாக சதுர்த்தியை முன்னிட்டு உற்சவர் முருக பெருமான் நாகர் வாகனத்தில் வள்ளி, தேவசேனாவுடன் எழுந்தருளினார். நாகர் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவ.,5 மாலை, 6:00 மணியளவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.

பொன்னேரி: திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் முருக பெருமானுக்கு சன்னதி உள்ளது. சிறப்பு வழிபாடுகளோடு நடந்து வரும், கந்த சஷ்டியின் கடைசி நாளான நவ.,5 மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீப ஆராதனைகளும் நடைபெறுகிறது. நவ.,6 மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானைசமேத ஸ்ரீமுருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபோகமும் நடைபெறுகிறது.

கடம்பத்துார்: ஸ்ரீதேவிக்குப்பத்தில் அமைந்துள்ளது வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகன் கோவில்.கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி, நவ.,6 காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar