Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் அதியமான் கோட்டை கோவிலில் கால பைரவர் ஜெயந்தி விழா அதியமான் கோட்டை கோவிலில் கால பைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரையில் வானர சேனைகள் அமைத்த பாறை பாலம்
எழுத்தின் அளவு:
சேதுக்கரையில் வானர சேனைகள் அமைத்த பாறை பாலம்

பதிவு செய்த நாள்

22 நவ
2016
12:11

கீழக்கரை: சேதுக்கரை அருகே வானர சேனைகள் அமைத்த பாறை பாலத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களிலிருந்து வரும் யாத்ரிகர்கள் கடற்கரையில் நின்றவாறு பாலம் அமைந்துள்ள இடத்தை வணங்கி செல்கின்றனர். ராமநாதபுரம் சேதுக்கரை கடற்கரை, ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையதாகும். மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். சீதையை மீட்பதற்காக சேதுக்கரை கடற்கரையில் இருந்து இலங்கை ராவணன் கோட்டை வரை சேதுபாலம் அமைக்கப்பட்டதாக புராணங்கள் மூலம் தெரியவருகிறது.

சேதுபந்தனம் எனப்படும் வெண்பாறையால் ஆன பாலத்தை நளன், அங்குதன், ஆஞ்சனேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர சேனைகள் அமைத்தனர். மேலும் ராமனிடம், விபீஷணர் சரணாகதி அடைந்த இடம் என்ற பெருமையும் சேதுகரைக்கு உண்டு. இதுகுறித்து சேதுக்கரை வரலாற்று ஆர்வலர் மு.மங்கள ராஜு கூறுகையில், “சேதுக்கரைக்கு ரெத்தினாகரம் என்று மற்றொரு பெயரும் உண்டு. கடற்கரையில் இருந்து கடலில் ஒரு கி.மீ., தொலைவில் தென்கிழக்காக உள்ள குறிப்பிட்ட இடத்தில் 50 அடி அகலம் கொண்ட வெண் கற்களால் ஆன பாலம் உள்ளது. இந்த பாலம் இலங்கை தலைமன்னார் வரை செல்கிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள் நாட்டு படகுகள் (வத்தை) மூலம் வானர சேனைகள் அமைத்த பாலத்திற்கு சென்று தரிசித்துவிட்டு திரும்புவது வழக்கமாக இருந்தது. அப்போது இடுப்பளவு மட்டுமே கடல்நீர் இருந்தது. சூரிய உதயம் அதாவது காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1:30 மணிவரை மட்டுமே யாத்ரிகர்கள் அழைத்து செல்லப்படுவர். அதன்பின்னர் கடல்நீர் மட்டம் உயர்ந்துவிடும். தற்போது அதிக ஆழம் கொண்ட பகுதியாக மாறியுள்ளது. இதனால் 2003 முதல் பாறை பாலத்தை பார்வையிட செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இதனால் சேதுக்கரை வரும் யாத்ரிகர்கள் கடற்கரையில் நின்றவாறு வானர சேனைகள் அமைத்த சேதுபாலம் இருக்கும் பகுதியை நோக்கி வணங்கிவிட்டு செல்கின்றனர்,” என்றார். மீனவர் ஒருவர் கூறுகையில், “கடந்த 2003க்கு முன்புவரை சேதுபாலத்தை பார்வையிட சேதுக்கரையிலிருந்து ஏராளமான யாத்ரிகர்களை வத்தைகளில் அழைத்து செல்வோம். இதை ஒரு தொழிலாகவே இப்பகுதி மீனவர்கள் செய்துவந்தனர். அரசு தடைவிதித்தால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வெளியூர்களிலிருந்து வரும் விசைப்படகுகள் வழிதெரியாமல் பாறையில் மோதுகின்ற சம்பவம் இப்போதும் நடக்கிறது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar