திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்த நிகேதனில், வரும் 27ம் தேதி, திருவாசக முற்றோதல் நடக்கிறது. திருக்கோவிலுார், ஸ்ரீ ஞானானந்த நிகேதனில், வரும் 27ம் தேதி, காலை 9:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி துவங்குகிறது. நிகழ்ச்சிக்கு, சதாசிவகிரி சுவாமிகள், சமாநந்த சரஸ்வதி சுவாமிகள், பிரபவானந்த சரஸ் வதி சுவாமிகள், ஆத்மதத்வானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ சுவாமி அமிர்தேஸ்வரானந்தா சுவாமிகள் தலைமை வகிக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்யானந்தகிரி சுவாமிகள் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி அய்யப்ப நகர் சேக்கிழார் மன்றம், திருவாதவூராரர் திருவாசகம் முற்றோதல் குழு, உரையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வார வழிபாட்டு மன்றம் உள்ளிட்ட சிவனாடியார்கள் பங்கேற்கின்றனர்.