பதிவு செய்த நாள்
28
நவ
2016
11:11
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்தா நிகேதனில் நடந்த திருவாசக முற்றோதல் ஞானவேல்வியில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார், ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் உலக நண்மைக்காக திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வி நேற்று நடந்தது. ஞானானந்தா சத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான், அம்பிகையுடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு வேள்வி துவங்கியது.
நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர்கள் நித்யானந்தகிரி சுவாமிகள் சதாசிவகிரி சுவாமிகள், சமாநந்த சரஸ்வதி, பிரபவானந்த சரஸ்வதி, ஆத்மதத்வானந்த சுவாமிகள் அம்ருதேஸ்வரானந்தா தலைமை தாங்கி கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லஷ்மிநாராயணன் ஆகியோருக்கு சிவ பஞ்சாயதன பூஜைகள் செய்து திருவாசக முற்றோதல் பெருவேள்வியை துவக்கி வைத்தனர். திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாதவூர்ரார் முற்றோதல் குழு உறையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வாரவழிபாட்டு மன்றம், மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை, தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம், கண்டாச்சிபுரம் தமிழ்வேத வார வழிபாட்டு சபை திருக்கோவிலுார் சைவ சித்தாந்த மாணவர்கள் மற்றும் சுற்றுபுரத்தை சேர்ந்த சிவனடியார்கள் பலரும் வேல்வியில் பங்கேற்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாது நடந்த வேள்வியில் அறக்கட்டளை செயலாளர் பரமேஸ்வரன் அறங்காவலர்கள் தேவராஜன் கிருஷ்ணமூர்த்தி சுவாமிநாதன் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருநீற்று பை பிரசாதமாக வழங்கப்பட்டது.