திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2016 11:11
காரைக்கால்: மழை வேண்டிய திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நந்தி பகவானுக்கு வருண ஜெப பூஜை நடந்தது. காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டத்தில், பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும், சம்பா சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மழை வேண்டி, திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், நேற்று முன்தினம் வருண ஜெப பூஜை நடந்தது. சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் நேர் எதிரே சங்கு மண்டபத்தில் அருள்பாலிக்கும் நந்திகேஸ்வரர் சிலையைச் சுற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பி, விக்னேஷ்வர பூஜையுடன் வருண ஜெபம் துவங்கியது. சகல திரவியங்களால் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம், வருண ஜபம் செய்யப்பட்டது. தர்மபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.