திருச்சானூர் பிரம்மோற்சவ விழா: முத்துப்பந்தல் வாகனத்தில் தாயார் உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2016 11:11
திருப்பதி: திருச்சானூரில் பிரம்மோற்சவ விழாவில் 3ம் நாளான நேற்று, முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 26ம் தேதி துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3ம் நாளான (நவ.28) நேற்று முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில், உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி ரத உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான டிசம்பர் 4ம் தேதி காலை பஞ்சமி தீர்த்தமும், மாலையில் கொடியிறக்கம் வைபவமும் நடைபெறுகின்றன.