பதிவு செய்த நாள்
29
நவ
2016
12:11
ஆர்.கே.பேட்டை: பத்மாபுரம் சாய்பாபா கோவிலில், நேற்று காலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பத்மாபுரம், வாலாஜாபேட்டை சாலையில் உள்ளது சாய்பாபா கோவில். இங்கு, நித்திய பூஜை, வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் பவுர்ணமி நாளில், பல்லக்கு பவனியும் நடந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணிக்கு, காக்கட ஆரத்தியும், அதை தொடர்ந்து, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஆர். கே.பேட்டை, பத்மாபுரம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம், 12:00 மற்றும் மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு ஆரத்தி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, ஜ் ஆரத்தி காட்டப்பட்டது. ற்று, தங்க காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சாய்பாபா, நாளை மறுதினம், வியாழக்கிழமை, மாலை, 6:30 மணிக்கு, பல்லக்கில் பவனி வருகிறார். அன்றைய தினம், 3:00 மணிக்கு, சிறப்பு ஹோமம் நடக்கிறது.