Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் ... கார்த்திகை மாத அமாவாசை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை கார்த்திகை மாத அமாவாசை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜவ்வாது மலையில் மழை வேண்டி நெல்லி மரத்திற்கு பூஜை
எழுத்தின் அளவு:
ஜவ்வாது மலையில் மழை வேண்டி நெல்லி மரத்திற்கு பூஜை

பதிவு செய்த நாள்

30 நவ
2016
11:11

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், வனப்பகுதியில் உள்ள நெல்லி மரத்திற்கு, 15வது ஆண்டாக சிறப்பு பூஜை செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில், விநாயகர் மற்றும் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து மலை மீது ஒரு கி.மீ., வனப்பகுதியில், பழமை வாய்ந்த நெல்லி மரம் உள்ளது. இதற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினால், மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.கடந்த, 15 ஆண்டுகளாக நெல்லி மரத்திற்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆர்ய சமாஜம் சார்பில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம், மாலை உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், நெல்லிமரத்திற்கு வேத விற்பன்னர்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்தனர்.இதில், போளூர் மற்றும் ஜவ்வாது மலையை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஒப்பாரி வழிபாடு : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அங்குள்ள ஏரிக்கரையில் மன்மதன் கொடும்பாவியை நேற்று எரித்து, ஒப்பாரி வைத்து, நுாதன வழிபாடு நடத்தினர். இது குறித்து, அப்பகுதி பெண்கள் கூறியதாவது: மழை பெய்வதற்கு காரணமாக உள்ள வருண பகவான், தற்போது மன்மதன் பிடியில் சிக்கி, மக்களியாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வருண பகவானை மழை பெய்ய விடாமல், மன்மதன் தடுத்து வருகிறார். அதனால், அவரின் கொடும்பாவியை எரித்து, ஒப்பாரி வைத்து வழிபட்டோம். இதனால், வருண பகவானை தன் பிடியில் இருந்து மன்மதன் விடுவித்து, மழை பெய்ய வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar