திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் இ உண்டியல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூவர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம். ஆனால் நாடெங்கும் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். இதனால் கோயிலில் உண்டியல் காணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் எளிமையாக காணிக்கையை செலுத்தும் வகையில் இ உண்டியல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கார்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது காணிக்கையை செலுத்த முடியும். இந்த இ உண்டியல் சேவை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.