சில பெருமாள் கோவில்களில் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் விநாயகர் இருப்பார். சீர்காழி அருகில் திருமணிக்கூடம் பெருமாள் கோவிலில் இவர் தெற்கு நோக்கி, சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரை, நாலாயிரத்தொரு விநாயகர் என்று அழைக்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் தலைக்குள் சென்று விடுமாம். இதேபோல் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப்பெருமாள், மதுரை தெற்குமாசிவீதியிலுள்ள நவநீத கிருஷ்ணர் கோவில், சென்னை மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் விநாயகர் இருக்கிறார்.