சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் சம்வத்சரா அபிஷேக தினம் நடந்தது. காட்டுவனஞ் சூரில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பில், புதிதாக ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. இதன் 3ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.