சோழவந்தான்: சோழவந்தான் சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் மார்கழி உற்சவத்தில் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.பக்தர்கள் வழங்கிய ஆயிரம் கிலோ பூக்களால் இப்பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நலச்சங்க நிர்வாககுழு தலைவர் வீரபத்திரன், நிர்வாகிகள் தனசேகரன், சேகரன் செய்திருந்தனர்.