Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் அனுமந்த் ஜெயந்தி ... விழுப்புரம் ஐயப்ப பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2016
02:12

விழுப்புரம்: அனுமன் ஜெயந்தியை யொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை யொட்டி விழுப்புரம் திரு.வி.க., வீதியிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

சுவாமிக்கு வடமாலை, தங்கக்கவசம் சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில், வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதேபோல், விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் ஸ்ரீஅச்சுத ஆஞ்சநேயர் கோவிலில் 27 அடி உயர சுவாமி சிலைக்கு பால் அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் ராஜாங்குளக் கரையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வடைமாலை, வெற்றிலை தோரணத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள ஹனுமன் கோவிலில், சுவாமிக்கு 108 வடைமாலை, 1008 வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலிலும், விருகாவூர் சர்க்கரை விநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலிலும் ஹனுமன் ஜெயந்தி நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு, 200 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின், சந்தனகாப்பு சாற்றப்பட்டு, வடைமாலை அணிவிக்கபட்டது. திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள, சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், திருமஞ்சனம், வெண்ணைகாப்பு அலங்காரம் நடந்தது. கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடந்தது. அவலுார்பேட்டை ஏரியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு செந்துார காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதே போல் பெத்தான் குளக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar