Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனைப் பாடியே திட்டியவர்! உச்சிப்பொட்டும் மெட்டியும் எதற்காக? உச்சிப்பொட்டும் மெட்டியும் எதற்காக?
முதல் பக்கம் » துளிகள்
காக்கா பிடிக்காதீங்க!
எழுத்தின் அளவு:
காக்கா பிடிக்காதீங்க!

பதிவு செய்த நாள்

03 ஜன
2017
04:01

கந்தனும், குமரனும் ஒரு அரசரிடம் பணிபுரிந்தனர். கந்தன் முருக பக்தன். முருகனாலேயே எல்லாம் நடக்கிறது என்று மன்னர் உள்ளிட்ட  எல்லாரிடமும் சொல்வான். குமரன் காக்கா பிடிப்பவன். அரசரால் தான் எல்லாம் நடக்கிறது என்பான். இவர்கள் சொல்வதில் எது சரியானது என  அரசருக்கு சந்தேகம் வந்துவிட்டது. மந்திரியை அழைத்து அவர்களை பரீட்சிக்க  சொன்னார். மந்திரி அவர்களிடம் நூறு வெள்ளிக் காசுகளைக்  கொடுத்து, இதை வைத்துக் கொண்டு நீங்கள் நூறு நாட்கள் வெளியூரில் தங்க வேண்டும். பிறகு இங்கே வாருங்கள். இது அரச கட்டளை, என்றார்.  அவர்களும் புறப்பட்டனர். செல்லும் வழியில் ஒரு முருகன் கோயிலைப் பார்த்த கந்தன், முருகனுக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல்  படைத்தான். அதை அங்கு வந்த ஏழைகளுக்கு கொடுத்து, அவர்கள் பசியாறுவதைப் பார்த்து மகிழ்ந்தான். நூறு காசுகளும் ஒரே நாளில் செலவழிந்து  விட்டது. அவனை வணங்குவது என் கடமை, என்னைக் காப்பது அவன் கடமை என்று நினைத்தவனாய் பயணத்தைத் தொடர்ந்தான்.

வழியில், ஒரு வண்டி குளத்தில் விழுந்து இருவர் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்தான். அவர்களைக் காப்பாற்றினான். அதன்பிறகு தான்,  தத்தளித்தவர்கள் அவ்வூர் ராஜகுமாரன் மற்றும் வண்டியோட்டி என்பதைத் தெரிந்து கொண்டான். அவர்கள் அவனை அரண்மனைக்கு அழைத்துச்  சென்றனர். தன் மகனைக் காத்த கந்தனுக்கு, ராஜ உபசாரம் செய்த மன்னன், தங்கள் அரண்மனையில் தங்கிச் செல்லும்படி வேண்டினான். கந்தனுக்கு  நூறு நாட்களும் ராஜ உபசாரம் நடந்தது. குமரன், ஒரு சத்திரத்தில் தங்கினான். அவனது பணத்தை தலைக்கடியில் வைத்திருந்தான். ஆழ்ந்த  உறக்கத்தில் இருந்த போது, சிலர் அதைத் திருடிச் சென்று விட்டனர். விழித்த அவன், வருத்தமடைந்து, பசியோடு நடந்த போது, கந்தன் தங்கியிருந்த  அரண்மனை கண்ணில் பட்டது. அங்குள்ள நந்தவனத்திற்கு சென்றான். அப்போது, ஒரு மரத்திலிருந்த கழுகு, பாம்பைப் பிடித்து கொத்திக்  கொண்டிருந்தது. பாம்பின் விஷம் மரத்தடியில் படுத்திருந்த, ராஜகுமாரனின் கழுத்தில் விழுந்ததைப் பார்த்தான்.

தன் கத்தியை எடுத்து, அந்த விஷத்தை சுரண்டினான். அந்த நேரத்தில், மன்னன் வந்து விட, தன் மகனை அவன் கொலை செய்ய முயற்சிக்கிறானோ  என்று எண்ணி, சிறையில் அடைத்து விட்டான். ஒருநாள், கந்தன் சிறைவாசிகளுக்கு, முருகனின் சிறப்பை எடுத்துரைக்க சென்றான். அங்கே குமரன்  இருந்ததைப் பார்த்தான். நடந்ததை எடுத்துச் சொன்னான் குமரன். குமரா! தெய்வத்தை நம்பு! மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த பிறப்பாயினும் நம்பாதே! மன்னர்களும் ஒருநாள் அழியப்போகிறவர்கள் தானே! அழியாப் பொருளான முருகப் பெருமானை மட்டுமே புகழ்ந்து பேசு, என்று புத்திமதி  சொன்னான். குமரனும் அதை ஏற்றான். தாங்கள் வந்த விஷயத்தை மன்னனிடம் சொன்ன கந்தன், குமரனை விடுவிக்கச் செய்தான். இருவரும் த ங்கள் நாட்டை அடைந்தனர். மன்னரிடம் குமரன், தெய்வ அனுகூலமே உயர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டேன், என்றான்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar