திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழா, பகல்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து முத்துநீள், வைரஅட்டிகை, முத்துச்சரம், வெள்ளை மகர கண்டிகை, ரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட அலங்காரத்தில் அர்ச்சனா மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.