Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அன்னை காவிரியை வணங்கும் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு! அன்னை காவிரியை வணங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமப்புற கோவில்களுக்கு உள்ளாட்சி தேர்தலால் புத்துயிர்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 அக்
2011
10:10

உடுமலை:உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பல நூதன வழிகளை கையாண்டு வரும் வேட்பாளர்கள் இம்முறை கிராம கோவில்களுக்கு நன்கொடை அளித்து வாக்காளர்களுடன் ஒப்பந்தம் போட்டு வருகின்றனர். இந்த நடைமுறையை தடுக்க வழியில்லாததால் சிக்கன வேட்பாளர்கள் திணறி வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு போட்டி அதிகமாக நிலவுகிறது. இப்பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே தனியாக பந்தல் அமைத்து சாப்பாடு, பிரியாணி மற்றும் மது வகைகளை வழங்குவது வழக்கமாக உள்ளது. அனைவரிடமும் பரிசுப்பொருட்களை வாங்கி கொள்ளும் வாக்காளர்கள் எந்த பக்கம் ஆதரவு அளிப்பார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது. இத்தகைய நடவடிக்கைளால் திருப்தியடையாத வேட்பாளர்கள் இறுதியாக கிராம கோவில்களின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். கிராமப்பகுதிகளில் உள்ள காவல் தெய்வங்கள் மற்றும் இதர கோவில்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கிராம மக்கள் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதில்லை. இந்த கருத்தை முக்கிய வியூகமாக கொண்டு வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் கிராம கோவில்களை புதுப்பித்து தருவோம்; எனவே அனைவரும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.சமுதாய கோவில்களை சார்ந்தவர்களில் பொறுப்பாளர்களை சந்தித்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக வழங்கி ஓட்டுக்காக சத்தியம் வாங்கும் நிலையும் உள்ளது. புதிதாக கோவில் கட்டுவது, பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம், பராமரிப்பு பணிகள் என அனைத்து பணிகளுக்கும் நிதி வழங்கப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 30 க்கும் அதிகமான ஊராட்சிகளில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வலுவான வேட்பாளர்கள் கோவிலுக்கு நிதி அளிக்கும் நிலையில், செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் இந்த நூதன ஒப்பந்தத்தை முறியடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு, உள்ளாட்சி தேர்தலால் கிராம கோவில்களுக்கு புத்துயிர் கிடைத்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar