Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலங்கையிலிருந்து 20 ஆயிரம் ஐயப்ப ... அப்பம் தட்டுப்பாடு இருக்காது: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா 7 ஆயிரம் லட்டுகள் தயார்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா 7 ஆயிரம் லட்டுகள் தயார்

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
12:01

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்களில் ஜன.8 அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

புனித மாதமான மார்கழியில், வைகுண்ட ஏகாதசி விழா, பிரசித்தி பெற்ற ஆன்மிக நிகழ்வாகும். இவ்விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நாளை அதிகாலை சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில் வீதி, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஜன.7,8 மற்றும் மறுநாள் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறும். காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை சொர்க்க வாசலில் கட்டத்தேவையான திரவியப்பொருட்கள் பக்தர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. ஜன.8 அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் பரமபத வாசல் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, வாசுதேவ புண்யாகவசனம், சங்கல்பம் நடைபெறும். தொடர்ந்து, 5:00 மணி முதல், 5:30 மணிக்குள் பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாளுக்கு அலங்கார பூஜை, சாற்றுமறை தீர்த்தப்பிரசாதம் வழங்கப்படும். இரவு, 8:00 மணிக்கு நாம சங்கீர்த்தன பஜனை, 8:30 மணிக்கு கண் விழிப்பு சிறப்பு கீர்த்தனை நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி விழா, பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, ஏழு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar