Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா ... புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ தாண்டவ நடனம் புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் உபகோவில்களில் ஆருத்ரா விழா உற்சவர் நடராஜ பெருமான் வீதியுலா
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் உபகோவில்களில் ஆருத்ரா விழா உற்சவர் நடராஜ பெருமான் வீதியுலா

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
12:01

திருத்தணி : திருத்தணி முருகன் உபகோவில்களில், நேற்று, ஆருத்ரா விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவர் வீதியுலா நடந்தன. திருத்தணி முருகன் கோவிலில், ஆருத்ரா விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, மலைக்கோவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் சன்னதியில், மூலவருக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சண்முகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதே போல், முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆருத்ரா விழாவையொட்டி, நேற்று, அதிகாலை, 3:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, நடராஜ பெருமானுக்கு அண்ணாச்சி, திராட்சை, கொய்யா, பேரீச்சம், மாதுளம், ஆப்பிள், சாத்துக்குடி உட்பட, 15 வகையான பழங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தன.

தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் மத்துார் கிராமம் முழுவதும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி, சுந்தர விநாயகர் கோவிலில், ஆருத்ரா விழாவையொட்டி, நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் திருத்தணி நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், அருங்குளம் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar