Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் பாதம் பட்ட கல்: உத்திரமேரூரில் ... திருத்தணி முருகன் உபகோவில்களில் ஆருத்ரா விழா உற்சவர் நடராஜ பெருமான் வீதியுலா திருத்தணி முருகன் உபகோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா உற்சவ விழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
12:01

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆருத்ரா உற்சவ விழாவில், அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும், காலையில் சுவாமி புறப்பாடும் நடந்தன.

Default Image
Next News

மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திர பவுர்ணமியன்று, ஆண்டு தோறும் ஆருத்ரா உற்சவம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும். கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் சுவாமி ஊர்வலம் நேற்று காலை நடந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நடராஜர் அலங்கரிக்கப்பட்டு நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், முத்தீஸ்வரர், சத்யநாத சுவாமி, கணிண்டீஸ்வரர், பணாமுடீஸ்வரர், இதை தவிர, சித்ரகுப்தர், ஆதிகாமாட்சி, கரிக்கினில் அமர்ந்தவள், மூங்கில் மண்டபம் விநாயகர் உட்பட பல கோவில் உற்சவர், காஞ்சி நகர மக்கள், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, ஆறுமுக சுவாமிக்கும், நடராஜ பெருமானுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், சண்முகர் அரைக்கட்டு நிகழ்ச்சியில் மூன்று முறை வெளியே புறப்பாடு சென்று வந்தார். இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலையில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகரும், நடராஜ பெருமானும், 16 கால் மண்டபத்தில் ஒருசேர எழுந்தருளி, பின் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ஆருத்ரா அன்று சண்முகரும், நடராஜரும் பக்தர்களுக்கு ஒன்றாக காட்சியளிப்பது இங்கு சிறப்பானதாகும்.

ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் அடுத்த சோமங்கலம், காமாட்சி அம்மன் உடனுறை சோமநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக சந்திர தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று விமரிசையாக நடந்தது. சதுரதாண்டவ நிலையில், நடராஜர் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருக்கழுக்குன்றம்: மார்கழி மாதத்தில் சிவன்கோவில்களில் ஆருத்ரா விழா கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு விஷேச அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமி தாயாருடன் மலர் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார். மேலும், 2ம் தேதியிலிருந்து மாணிக்கவாசகர் விழா நடந்து வந்தது. இந்த விழாவின் நிறைவும் நேற்று நடந்தது. கடைசி நாளான நேற்று நடராஜருடன் இவரும் வீதிஉலாவில் வந்தார். வழியில் நின்ற பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமியைதரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar