Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்? கோவில்களில் பிரசாதங்களை இலையில் வழங்க உத்தரவு! கோவில்களில் பிரசாதங்களை இலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: மேல்சாந்தி தேர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 அக்
2011
11:10

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை ஒரு ஆண்டுக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறுகிறது. ஐப்பசி மாத பூஜைகளில் தொடக்கமாக நேற்று மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி சசிநம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் நடத்தினர். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனமும், நெய்யபிஷேகமும் நடைபெறுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் கணபதிஹோமம் நடைபெறுகிறது. காலை 7.30க்கு உஷபூஜை நிறைவு பெற்றதும் புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு இண்டர்வியூ மூலம் தேர்வு செய்தவர்கள் பட்டியிலில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார். இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் மற்றும் தேவசம்போர்டு நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதே முறையில் மாளிகைப்புறம் மேல்சாந்தியும் தேர்வு செய்யப்படுகிறார்.கார்த்திகை 1ம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு இந்த பதவியில் இருப்பார். இன்று முதல் ஐந்து நாட்களும் மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக சகஸ்ரகலச பூஜையும், களபாபிஷேகமும், இரவு 7 மணிக்கு படி பூஜையும் நடைபெறுகிறது. 22ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை மேல்சாந்தி தேர்வு: சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவதற்காக குலுக்கல் முறை நடந்தது. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாளிகைபுரம் கோயிலுக்கும் நம்பூதிரி தேர்வு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar