Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் கோயில் ரூ. 20 ... ஷீரடி சாய்பாபா கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா: பிப்.,2ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
12:01

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூசத் தேர் திருவிழா, பிப்.,2ல் துவங்குகிறது. சென்னிமலை மலைக்கு மேல் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச, தேர் பெருவிழா, 15 நாட்கள் நடக்கும். ஆதி பழநி என அழைக்கப்படும் இங்கு, தைப்பூச விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, பிப்.,1ல் கணபதி ஹோமம், கிராமசாந்தி நடக்கிறது. பிப்., 2ல் காலை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பிப்.,3ல் இரவு பல்லக்கு சேவை, 4ல் மயில் வாகனக்காட்சி, 6ல் பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சி, 7ல் யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும், இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது. பிப்., 8ல் மாலை, 6:00 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவு, 8:00 மணிக்கு காமதேனு வாகனக்காட்சி, 9ல் மாலை, 6:00 சிறப்பு அபிஷேகம், எட்டு மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது.

தேரோட்டம்: பிப்.,10ல் அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், காலை, 7:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, தேர் நிலை வந்தடைகிறது. பிப்.,12ல் இரவு, 7:00 மணிக்கு, பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 13ல் பூத வாகனக்காட்சி நடக்கிறது.

மகா தரிசனம்: பிப்.,14ல் காலை, 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதே முத்து குமாரசுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மகாதரிசனம் அன்று நடராஜப் பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய ஸ்வாமி வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா அதிகாலை, 5:00 மணி வரை நடக்கிறது. பிப்.,15ல் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், தைப்பூச தேர்த் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் முருகையா, கோவில் செயல் அலுவலர் அருள்குமார், அலுவலர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பிப்., 3 முதல், 14 தேதி வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar