Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசை வைகையில் தர்ப்பணம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏழுநிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொலிவிழந்து வரும் மாரியூர் கடற்கரை: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
01:01

சாயல்குடி: சாயல்குடி அருகில் உள்ள மாரியூர் கடற்கரை பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி பொலிவிழந்து வருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. மான் உருவில் வந்த ராவணனின் மாமன் மாரீசன், சீதையுடன் விளையாட்டு காட்டவே கோபமுற்ற ராமன் அதனை வதம் செய்தார். மாரீசன் வதம் செய்யப்பட்ட இடம் என்பதால் அப்பகுதி மாரியூரானது.  இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மாரியூர் கடற்கரை சவுக்கு மரங்கள் நிறைந்த மணற்பாங்கான எழில்மிகு கடற்கரையாக உள்ளது. ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பித்ருதோஷம் நீங்குவதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்ரிகர்கள் இங்குவந்து புனிதநீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி பூஜை செய்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கடற்கரையையொட்டி உடைமாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளது. மண் அரிப்பை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளது.  இருந்தும் பராமரிப்பு இல்லாததால் கடற்கரையில் புற்கள், குப்பைகள், துணிகள் தேங்கி சுகாதாரகேடு நிலவுகிறது. உடைமாற்றும் அறைகளில் உள்ள கதவுகள் திருடப்பட்டு திறந்தவெளியாக உள்ளது.  போதிய கழிப்பறை வசதி இல்லாததால் கடற்கரை பகுதியை பக்தர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர்.  வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை பகுதி பொலிவிழந்து வருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் மாரியூர் கடற்கரை பகுதியை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு  ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar