Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசையையொட்டி:தாமிரபரணியில் ... தான்தோன்றியம்மன் கோவிலில் பிப்.,6ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரலில் தை அமாவாசை திருவிழா:திரளான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
01:01

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோகோயில் தை அமாவாசை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தை அமாவாசையை முன்னிட்டு 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் வரை தினமும் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை பூஜைகளும் மற்றும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

பத்தாம் திருவிழாவான நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் எழுந்தருளி அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபட்டனர். இதனை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

11-ம் திருவிழாவான இன்று சனிக்கிழமை காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாகசாந்தியும், இரவு 10.30 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சியும் நடைபெறும். 12-ம் திருவிழாவான நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் 12.30 அன்னதானமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலை சயன தரிசன மங்கள தரிசனமும் நடைபெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar