அம்பாளின் கண்களை மீன் போன்று இருப்பதாகத்தான் வர்ணிப்பார்கள். எனவே தான் மதுரையில் ஆட்சி செய்யும் அம்பிகைக்கு மீனாட்சி என்றும், அங்கயற்கண்ணி என்றும் பெயர் ஏற்பட்டது. அபிராமி அந்தாதியில் அம்பிகையை வர்ணிக்கும் அபிராமி பட்டர் அம்பிகைக்கு மானின் விழிபோல கண் இருப்பதாக வர்ணிக்கிறார். நுõறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதியின், நுõறாவது பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.