Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமதண்டீஸ்வரர் கோவிலில் உலக ... பொன்மலை பெருமாள் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
01:01

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை; எனவே, அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை தடை செய்ய வேண்டும் என, செஞ்சி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில், ஊஞ்சல் உற்சவத்திற்கு, இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. தடை உத்தரவை நீக்க கோரி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 27ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஊஞ்சல் உற்சவத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 2௭ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை 3:30 மணிக்கு, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளின் நிலை குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, குடிநீர் வசதி, பக்தர்கள் தங்கும் இடம், கொடிமரம் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கஜேந்திரன், பிரகாஷ், தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ., அறவாழி, அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar