எமதண்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதிக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2017 01:01
மயிலம்: ஆலகிராம எமதண்டீஸ்வரர் கோவிலில் உலக அமைதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர் கோவிலில் உலக அமைதிக்கு கூட்டுவழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்திலுள்ள மூலவர், நந்தி, சித்தர், விநாயகர் சுவாமிகளுக்கு காலை 11:00 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு திரிபுர சுந்தரி அம்மனுக்கு திருமஞ்சன வழிபாடு மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் உலக அமைதிக்கு கூட்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவனடியார் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.