Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மனுக்கு தை திருவிழா: பெண்கள் ... பவானி மகாசக்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஷெட் தயார்: பழைய தேர்கள் இடமாற்றம் ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
12:01

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஷெட்கள் தயாராகும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, இடத்தை மீட்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், பழைய தேரை இடமாற்றம் செய்யாமல் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில், வைகாசி விசாகத்தின்போது, சுகவனேஸ்வரர், கோட்டை அழகிரிநாதர் கோவில்களில், தேரோட்டம் நடக்கும். இரு கோவில் தேர்கள் பழுதானதால், 2014 முதல், தேரோட்டம் நடக்கவில்லை. நடப்பாண்டு தேரோட்டம் நடத்த, தலா, 46 லட்சம் ரூபாய் செலவில், இரு கோவில்களுக்கும், மரத்தேர் தயார் செய்யும் பணி நடக்கிறது. ஆனால், தேரடியில் நிறுத்தப்பட்டுள்ள பழைய தேர்கள், இரண்டு ஆண்டுகளாக, போக்குவரத்துக்கு இடையூறாக கடை வீதியில் நிலை கொண்டுள்ளன. அவற்றை இடமாற்றம் செய்ய, தேர் கலைநயம், சிற்ப கலை பெருமையை, எதிர்கால சந்ததியினர் அறிய, சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஆறு லட்சம் ரூபாய் செலவில், தேர்களை, கண்ணாடி ஷெட்டில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஷெட்டும் தயாராகிறது. இடம் மாற்றினால், தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை, வியாபாரிகள் ஆக்கிரமிப்பர். அவர்களை வெளியேற்றுவது கடினம் என்பதால், தேர் இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடைவீதியில், இரு கோவில்களின் தேர்களும், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படவில்லை. அதேநேரம், தேர்கள் நிறுத்தப்பட்டதால், அங்குள்ள விநாயகருக்கு, தேரடி விநாயகர் என, பெயர் இருந்தது. பின், ராஜகணபதியாக பெயர் மாற்றம் பெற்றார். தேரடி என்ற பெயர் உள்ளதால்தான், இரு தேர்களும் அங்கு நிறுத்தப்படுகின்றன. அதை சுற்றி, வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கிருந்து தேரை அகற்றினால், அந்த இடம் முழுவதும், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கும். அவர்களை அகற்றுவது பெரும்பாடாகிவிடும். தற்போது, வைகாசி விசாகத்தின்போது, புதிய தேர் மூலம் தேரோட்டம் நடத்த தயாராகிறோம். புதிய தேர்கள், அங்கு கொண்டு செல்லப்பட்டால், பழைய தேர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுவிடும். மேலும், தேர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பை அகற்றினாலே, நெரிசல் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar