Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீத்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ... 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிப்.24ல் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிப்.24ல் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2017
11:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 24ல் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே, தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்தபோது, அடி, முடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்த நாள், சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே, பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த, லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் எழுந்தருளிய திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இதை முன்னிட்டு, அருணா சலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும், 24ல் மகா சிவராத்திரி விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்க உள்ளது. அன்று அதிகாலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னிதியில் லட்சார்ச்சனை நடக்கும். மாலை, 6:00 மணிக்கு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்சம் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபடுவர். தொடர்ந்து இரவில், நான்கு கால பூஜை நடக்கும். இரவு, 8:30 மணிக்கு முதல் கால பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள, லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மகா சிவராத்திரி அன்று உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கலை அரங்கத்தில் மாலை, 6:00 மணி முதல், விடிய விடிய தேவார பாடங்கள், இன்னிசை, பரதநாட்டியம், மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar