Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கோயில் கந்தசஷ்டி ... அம்மன் சிலையில் இருந்து பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலந்தீபாவளி கொண்டாடிய வடசித்தூர் மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 அக்
2011
10:10

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வடசித்தூர் கிராம மக்கள் மட்டும் தீபாவளிக்கு மறுநாளான நேற்று "மயிலந்தீபாவளி யை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடசித்தூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் "மயிலந்தீபாவளியாக கொண்டாடுகின்றனர். அன்று ராட்டினம் அமைக்கப்பட்டு, ஊரே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படும். இக்கிராமத்தில் இந்துக்கள் மட்டுமில்லாது, முஸ்லிம் குடும்பங்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் உறவினர்போல் பழகி வருவதால், ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் வரும் "மயிலந்தீபாவளி கிடா வெட்டில் கலந்து கொள்கின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் கவுண்டர் இனத்தில் செம்பங்கூட்டம் என்ற குலத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் அமாவாசை மற்றும் செவ்வாய் கிழமையன்றும் மாமிசம் சாப்பிடுவது இல்லை. இதனால், செவ்வாய் கிழமையன்று தீபாவளி வந்தால், அதற்கு அடுத்தநாளான புதன் கிழமையன்று மயிலந்தீபாவளியாக மாற்றியமைத்து கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இக்கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பெரியார் நினைவு "சமத்துவபுரம் திறக்கப்பட்டது. வடசித்தூரில் இந்து, முஸ்லீம் மக்கள் பல தலைமுறைகளாக ஒற்றுமை உணர்வுடன் "மயிலந்தீபாவளியை கொண்டாடி வருவது, இக்கிராமத்தின் தனிச்சிறப்பு.அதன்படி நேற்று "மயிலந்தீபாவளி அன்று பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தனர்.நேற்று மாலை 3.00 மணியளவில் இருந்தே மழை தொடர்ந்து பெய்ததால், வடசித்தூர் கிராமத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும், ஊராட்சி மன்றத்தின் முன்பு உள்ள மைதானத்தில் ஒன்று கூடி ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சமாக ஏறி விளையாடுவது வழக்கம். ஆனால், நேற்று மழை காரணமாக ராட்டினத்தில் ஏறி விளையாட முடியவில்லை. ஆனால், மட்டன் விருந்து அமர்க்களமாக நடந்தது. "மயிலந்தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதனால், வடசித்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar