Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மயான கொள்ளை விழா: ... ஈங்கூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் விழா ஈங்கூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் மயான கொள்ளை: ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
சேலத்தில் மயான கொள்ளை: ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
11:02

சேலம்: சேலத்தில், மாசி அமாவாசை மயான கொள்ளை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி அமாவாசை நாளில், சேலத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து, அம்மன் விக்ரகங்கள், சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு, மயான கொள்ளை எனப்படும் பூஜைகள் நடத்தப்படும்.இதன்படி, சேலம், காக்காயன் சுடுகாடு, செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுடுகாடுகளில், நேற்று காலை, 11:00 மணி முதல், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேளதாளம் முழங்க, பெரியாண்டிச்சி அம்மன் விக்ரகங்களுடன், பல்வேறு வேடங்கள் அணிந்து, கழுத்தில், ஆடு, கோழி குடல்களை அணிந்தபடியும், மண்டை ஓட்டை கவ்வியும், ஆக்ரோஷமாக பக்தர்கள் ஆடி வந்தனர்.அருள் வந்து ஆடியவர்கள் வாய்களில், கோழிக்குஞ்சுகள், ஆட்டு குட்டிகள் ஆகியவற்றை திணித்தனர். அவற்றை, ரத்தம் சொட்ட சொட்ட கவ்வியபடி, சுடுகாடு நோக்கி படையெடுத்தனர். அப்போது, பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குழந்தைகள் என, திரளான மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையில் படுத்தனர். அவர்களை தாண்டி சென்று, அருள் வந்து ஆடியவர்கள் ஆசி வழங்கினர். காக்காயன் சுடுகாட்டில், 3, 5 வயதுடைய இரு சிறுமியர், வேடம் அணிந்து, நாக்கை வெளியே துருத்தியபடி, ஆடி வந்தனர். ஏராளமான பக்தர்கள், அவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்றனர்.சேலம் மாவட்ட சுடுகாடுகளில், 10 ஆயிரம் கோழி குஞ்சுகள், 2,000 ஆட்டு குட்டிகளை கடித்து, ரத்தம் குடிக்கப்பட்டது. மாலை, 4:00 மணி வரை, அனைத்து சுடுகாடுகளிலும், இந்நிகழ்ச்சி நடந்தது.இதேபோல, வேலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், இத்திருவிழா கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar