புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, வரிக்குடி கிராமத்தில், காமாட்சி அம்மன் கோவில் குளத்தை சீரமைத்த போது, 1.5 அடி உயரம், 7 கிலோ எடையுள்ள ஐம்பொன் பெருமாள் சிலையும், 4 கிலோ எடையுள்ள சூலாயுதமும் கண்டுடெடுக்கப்பட்டன.இது பற்றி தகவலறிந்த, ஆவுடையார்கோவில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை செய்தனர். சிலை தன்மை குறித்து ஆய்வு செய்த பின், அரசு கருவூலத்தில் ஒப்படைப்பதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.