பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2017 11:03
பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழா நடந்தது. கடந்த பிப். 17ல் துவங்கிய மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா மார்ச் 9 வரை நடக்கிறது. இதையொட்டி திருக்கம்பம் அலங்கரிக்கப் பட்டு அதற்கு புனித நீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். நேற்று கொடியேற்றம் நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து இரவு 8:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடு வைத்து (தீச்சட்டி) பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பின், தங்கமயில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அடிவாரம் அழுகுநாச்சியம்மனுக்கு காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அம்பாள் புதுச்சேரி சப்பரத்தில் உலா வருதலும் நடக்கிறது. மாரியம்மன் கோயிலில் மார்ச் 3ல் திருக்கல்யாணம் மார்ச் 8ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜ மாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.