திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2017 12:03
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயமான, திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவில், நேற்று மூஞ்சூறு வாகனத்தில் விநாயகப் பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் அம்மன், மயில் வாகனத்தில் ஸ்ரீ சண்முகநாதர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.